சில சமயம் குழம்பி போவதுண்டு, ஏன் இவர்கள் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ?
— withKarthik Anantharaman, Bjp Marthandam, Saravanan Karuppusamy, Hindu Madurai,Vidhu Haasan, Bjp Sakkudisrinivasan Yadav, Tamil Arasan, Swami Vidyananda,Manutd Guru, Tamizh Hindutva, Yuvaraj Bjp, Bjp Coimbatore Thondamuthur Mandal, Yuva Sakthi Senthil Kumar, Raj Chennai, தஞ்சாவூர் பா.ஜ.க, Raj Che,Gobi Kannan, Karthik Prabhu and Venkatesh Kannaveera.எத்தனை தவறு இழைத்தாலும் ஏன் அரபி எஜமானர்களை ஆதரிக்கிறார்கள் ? இலங்கையை சேர்ந்த பதினேழு வயது ஏழை தமிழ் முஸ்லீம் பெண் தலையை சௌதி கற்கால அரசு வெட்டி வீழ்த்திட பொங்கி எழுவார்கள் இங்குள்ள தமிழ் "இனிய மார்கத்தினர்" என்று நினைத்தோம், ஆனால் அவர்களோ "ஷரியா சட்டம்" உலகிலேயே சிறந்தது என்று அரபியனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். சௌதியில் வாழும் தெற்காசிய முஸ்லீம்களை அரபியன் மிக கேவலமாய் வைத்திருப்பது வெட்ட வெளிச்சம். ஒரு ஐரோப்பியனையோ அமேரிக்கனையோ மரியாதையோடு பவ்யமாய் உபசரிக்கும் அரபியர்கள், அவர்களோடு தொழுகைக்கு வரும் சக தெற்காசிய முஸ்லீம்களை கீழ் நிலையிலேயே வைத்திருப்பதும் சத்தியமான உண்மை. சௌதிய சட்ட திட்டங்கள் அமேரிகர்களுக்கும், வளர்ந்த ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் விளையாட்டு விதிகள். அமேரிக்க மற்றும் ஐரோப்பிய "காம்பொன்டுகளில்" குடியும், சல்லாபமுமாய் இருக்கும் அவர்களை, புனித நாட்டு போலிஸ்காரர்கள் உள்ளே நுழைய கூட முடியாத நிலை. ஆனால் தெற்காசியர்களை ஆடு, மாடு, கோழி போல்தான் அவர்கள் பாவிக்கிறார்கள். அமேரிக்கர்கள் சொன்னால் வாயில் கை வைத்து அடங்கி ஒடுங்கி இருப்பவர்கள் சௌதிகள். அமேரிக்கன் தரும் இராணுவ உதவிகளும், தொழில்நுட்பமும் தான் இன்று சௌதி என்ற நாட்டின் முதுகெலும்பாய் இருக்கிறது என்பதும் அங்கிருப்பவர் அனைவரும் அறிந்ததே. சௌதி அரசர் என்றும் இரு புனித நகரங்களின் காப்பாளன் என்று தங்களை தாங்களே தூக்கி நிறுத்திக் கொள்ளும் சௌதி அரச பரம்பரை, அமேரிக்கர்கள் இடும் சொடுக்குக்கு வாலாட்டவில்லை என்றால் நடப்பதே வேறு. அப்படி வாலாட்டாவிட்டால் மூன்றாம் தர நாட்டு மக்கள் என்று இவர்கள் கேவலமாய் பேசும் நாடுகளில், படிக்காத முட்டாள் அரபியர்கள் பத்து பாத்திரம் தேய்த்துதான் வயிற்றை கழுவ வேண்டும். ஆக சௌதிகள், அமேரிக்கனின் அடிமைகள். . அந்த சௌதிகளுக்கு இவர்கள் அடிமைகள். எத்தனை கேவலம் இது ? அது சரி, ஏன் நமது நாட்டு "இனிய மதத்தினர் " பலர் இவர்களை புகழ்கிறார்கள். ? நம் பாரதத்தின் தொன்றுதொட்ட கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஏன் கேவலமாய் பேசுகிறார்கள் ? நம் ஆழ்ந்த தத்துவ ஞானத்தையும், அறிவு சார்ந்த கோட்பாடுகளையும் ஏன் தவறாக சித்தரிக்கிறார்கள் ? யந்திரன் திரைப்படத்தில், சிட்டி என்கிற அருமையான ஒரு யந்திரத்தில் சிவப்பு "சிப்பை" வைத்து விடுவான் வில்லன். அது தனக்கு தெரியாமலேயே அழிவு பாதையில் செல்லும். அது போலவே இயல்பில் நல்லவர்களான நம்மவர்களின் மூளையில், "மதவெறி" என்ற சிவப்பு "சிப்பை" வைத்துவிட்டார்கள் அரபிகள். அதனால்தான் அவர்களை அறியாமலேயே மதவெறி பிடித்து ஆடுகிறார்கள். பாவமாயிருக்கிறது நம் "சிட்டிகளை" பார்த்தால். இந்த சிவப்பு "சிப்பை" அப்புறப்படுத்தி எப்படி காப்பாற்றுவது இவர்களை ? |
Tuesday, 19 March 2013
சில சமயம் குழம்பி போவதுண்டு, ஏன் இவர்கள் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment