Tuesday, 19 March 2013

இலங்கை தமிழர்கள், விடுதலைப் புலிகள், திராவிடர்கள் என்ற இந்த மூன்று வார்த்தைகளுக்குள்தான் எத்தனை முரண்பாடுகள் ?


இலங்கை தமிழர்கள், விடுதலைப் புலிகள், திராவிடர்கள் என்ற இந்த மூன்று வார்த்தைகளுக்குள்தான் எத்தனை முரண்பாடுகள் ?

இலங்கை தமிழர்கள் : நம்முடைய தொப்புள் கொடி உறவுகள். நம் தேசத்தின் கலாச்சார, பண்பாடுகளை தம்முள் கொண்டவர்கள். மொழி, சமயம், பண்பாடு ஆகிய அடிப்படை கூறுகளில் நம்மை ஒத்தவர்கள். நம்மிடமிருந்து பிரிக்க முடியாதவர்கள். இன்று வாழ்வாதாரம் இல்லாமல் விளங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கேள்வி கேட்க நாதியில்லாமல் நசுக்கப் படுகிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. கழியும் ஒவ்வொரு நாளையும் கண்ணீரில் கழிக்கிறார்கள்.

திராவிடத் தமிழர்கள் : எந்தவித ஆதாரமான அடையாளங்களும் இல்லாமல் பிரிவினை வாதத்தையே மூச்சாக கொண்டவர்கள். எந்த காலத்திலும் மொழி ரீதியான இன‌மாக தங்களை அடையாளப்படுத்தி கொள்ளாத தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். தமிழன் என்ற தனியான ஒரு மொழி சார்ந்த அடையாளத்தை உருவாக்க முயலும் போலி நாத்திகர்கள்.. உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் பேசி, மொழி ரீதியாக தங்களையும் தேசத்தையும் பிரித்து, அர்த்தமுள்ள‌ சிந்தனைகள் ஏதும் இல்லாமல் அலையும் ஹிந்து சமய விரோதிக‌ள். தமிழ் கலாச்சாரம் என்று தனியாக ஒன்று இருப்பதாக பாவித்து, இந்தியாவில் வாழும் மற்றவர்கள் எல்லாம் ஏதோ செவ்வாய் கிரகத்து கலாச்சாரத்தை பின்பற்றுவது போல் சித்தரிப்பவர்கள். வெறித்தனமான பேச்சு, அரேபிய அடிமைகளோடு மறைமுகமான கூட்டு, சில கிறிஸ்த‌வ சூழ்ச்சிக்காரர்களின் தந்திரமான ஆதரவு என இவைதான் இவர்களின் அடையாளங்கள். ஜாதியத்தை ஹிந்துக்கள் விட்டு விடுவார்களோ என்பது தான் இவர்களின் மிகப்பெரும் அச்சம். எந்தவித தத்துவ பலமில்லாமல் இவர்கள் நாத்திகம் என்ற பெயரில் ஹிந்து சமயத்தையும், ஹிந்துக்களையும் தாக்கி அதன்மூலம் பயன்பெறும் சுயநலவாதிகள்.

விடுதலைப் புலிகள் : ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்டான அத்தனை வீரமும், விவேகமும் கொண்டு தொடங்கப்பட்ட இயக்கம். ஒரு இறையான்மை உள்ள நாட்டின் முழு இராணுவ பலத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டது. ஆனால் ஒரு கட்டத்தில், தான் செய்வதெல்லாம் சரி என்று நினைக்கத் தொடங்கி, சொந்த மக்களையே கொன்று குவிக்க தொடங்கியது. பாரத தேசத்தின் தமிழ் நாட்டில், பலமுறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டு தங்கள் அராஜகத்தை நியாயப் படுத்தியது. மிகப்பெரும் பலம் பெற்றிருந்த நிலையில் சிங்கள் அரசோடு ஆளுமையோடு பேச்சு வார்தை நடத்தி தமிழர்களுக்கு சுயமரியாதையோடு கூடிய வாழ்வை பெற்று தருவதை தவற விட்டார்கள். இவர்களின் அறிவற்ற வெறித்தனத்தால் லட்சக்கணக்கான தமிழர்களின் வாழ்வு இன்று நாசமடைந்துள்ளது. இந்திய முன்னால் பிரதமரை பட்டப்பகலில் கொன்ற இவர்களின் புத்தியில்லாத செயலால், பலம் வாய்ந்த இந்தியாவை பகைத்துக் கொண்டு அப்பாவி தமிழர்களை அகதிகளாய் சொந்த நாட்டிலேயே அலைய வைத்த முட்டாள்கள். விவேகமில்லாத வெறி எப்படி சக்தி வாய்ந்தவர்களையும் காணாமல் போகச் செய்யும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். சிங்கள வெறிநாய்கள் இன்று நம் பெண்களை நினைத்ததை எல்லாம் செய்கின்ற நிலையில் விட்டு விட்டு சென்ற, உணர்ச்சியை மட்டுமே கொண்ட முட்டாள்கள்.

இந்த விளக்கங்களை நான் எதற்கு எழுதினேன் என்றால், இந்த மூன்று வகையினரையும் நாம் இனைத்து பார்த்து விடக்கூடாது என்பதற்காகதான். முதலாமானவர்களான அப்பாவி தமிழர்கள்களுக்கு இன்று இழைக்கப்படும் கொடுமைகள் உலகில் எங்குமே இல்லை. இவர்களுக்காக நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் மனிதன் என்றே நம்மை நாம் சொல்லிக் கொள்ள முடியாது. இந்தியர்களாகிய நாம். நம் தொப்புள் கொடி உறவுகளுக்காக இந்தியா முழுதும் நாம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர்களின் மனித உரிமைகாக நாம் போராட வேண்டும்.
பிரிவினைவாதிகளான திராவிடத் தமிழர்கள், தமிழகத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஒரு கூட்டம். ஆகையால் அவர்கள் மேல் உள்ள வெறுப்பினால் நாம் அப்பாவி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தராமல் இருந்து விடக் கூடாது. வெகுஜன மக்களாகிய நாம், நம் கண்முன் நடக்கும் அராஜகத்தை பார்க்காமல் கண்மூடி இருப்பது நியாயமா ?

நூறு கோடி இந்தியார்கள் குரல் எழப்பத் தொடங்கினால், உலகமே மிரண்டு போகும், இந்த கண்ணீர் துளி இலங்கை கேட்காமலா போகும் ?
 — with Nagapattinam BjpNira JohnYousuf RiazVinodh Akkalraj,Yuvaraj BjpMeeran SaitPraveen Npk KumarTamilnadu BjpRajan HamanthkumarVidhu Haasanஇளஞ் சித்திரன்Manutd GuruHitch SlapBjp MarthandamHariharan BalajiBjp Tirupurவெற்றிச் செழியன்Yuva Sakthi Senthil KumarBjp ParamakudiBjp Coimbatore Thondamuthur MandalRaj Chennaiஇலங்கைஇந்துமக்கள் பாதுகாப்புபேரவை எஸ்.பி.எஸ்Aarthi A AarthiVenkatesh Kannaveeraஅர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சிSwami VidyanandaBjp Sakkudisrinivasan YadavKanyakumari SubashShaktivel Mudaliar,Tamil ArasanMadras MemesU.a. JegadeeshHindu ReligionSangeetha Rai andPremkumar Iyer.
Unlike ·  ·  · Share · March 9

No comments:

Post a Comment