மாமியார், மருமகன் சண்டைக்கு இத்தனை லட்சம் பேர் பலியா ?
— with Madras Memes, Yuva Sakthi Senthil Kumar, Obillix Bharadhwaj, Venkatesh Kannaveera,Manutd Guru, Yuvaraj Bjp, Swami Vidyananda, Karthik Prabhu, Bjp Sakkudisrinivasan Yadav, Hindu Madurai, Vidhu Haasan, Shaktivel Mudaliar, Raj Chennai and Valasai Pugazendhi.முஹம்மது நபி அவர்களின் கால கட்டத்தில் அரபிகள் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்தனர். திருமணங்கள் என்பவை பல சமயங்களில் ஒரு கூட்டத்திற்கும் மற்ற கூட்டத்திற்கும் ஏற்படும் ஒரு பந்தமாய் திகழ்ந்தது. விதவைகளுக்கு வாழ்வு தரவும் சில திருமணங்கள் நடந்தன. முஹம்மது அவர்களின் திருமணங்கள் அரசியல் ரீதியாகவும் சில கருணை அடிப்படையிலும் நடந்தன. அவருக்கு பதிமூன்று மனைவிமார்கள் இருந்ததாய் சொல்கிறார்கள். அவரின் முதல் மனைவி கதிஜா ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி மூன்றாவதாக முஹம்மது நபிகள் அவர்களை திருமணம் செய்தார். இவர்களிடையே கிபி 595 ஆம் ஆண்டு நடந்த திருமணத்தின் போது முஹம்மது அவர்களுக்கு வயது 25, கதிஜா அவர்களுக்கு வயது 40. ஏற்கனவே அவருக்கு குழந்தைகள் இருந்தன. முஹம்மது அவர்களோடு அவருக்கு பிறந்தவர் தான் பாத்திமா எனப்படும் மகள். பாத்திமாவின் கணவர் தான் இமாம் அலி எனப்படுபவர். ஷியாக்கள் எப்படி முஹம்மது நபி அவர்கள் இறைவனால் அறிவிக்கப்பட்டாரோ அதைப் போலவே அவரின் வாரிசையும் இறைவனே நியமிப்பார் என்று நம்பினார்கள். நபிகள் அவர்களின் கடைசி காலத்தின் அவர் இமாம் அலியை நபிகளின் வாரிசாய் இறைவன் நியமித்ததாய் சொல்கிறார்கள். நபிகளும் அவரை தன் வாரிசாய் கடைசி காலத்தில் தேர்ந்தெடுத்ததாய் சொல்கிறார்கள். கிபி 632 ஆம் ஆண்டில் நபிகள் இறந்தபோது அவரின் வாரிசு யார் என்ற கேள்வி பெரும் போராட்டமாய் மாறியது. சுன்னிகளோ நபிகளின் மனைவி ஆயிஷாவின் தந்தை அபு பக்கர்தான் அவரின் உண்மையான வாரிசு என்றார்கள். ஆயிஷா அதை முன்மொழிந்தார். ஆயிஷா இமாம் அலியை வண்மையாக எதிர்த்தார், போர்களும் மூண்டன. இமாம் அலி அவர்கள் இறைவனை வணங்கி தொழுது கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டார். அதன் பின் நடந்த கலவரங்கள், யுத்தங்கள் சொன்னால் பக்கங்கள் நீளும். ஷியாக்களும் சுன்னிகளும் ஹடித்துக்களை ஏற்றுக்கொள்வதில் முரன்படுகிறார்கள். சில ஹடித்துக்கள் பொதுவாய் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பல ஹடித்துக்கள் ஒரு சாராரால் ஏற்கப்பட்டு மற்றவரால் புறக்கனிக்கப் படுகின்றன. சுன்னிகள் ஷரியாவை தழுவுகிறார்கள், ஷியாக்கள் அதோடு குரானின் வழிகாட்டுதலையும் எடுத்துக் கொள்கிறார்கள். ஷியாக்களும், சுன்னியின் உட்பிரிவான சுஃபிக்களும் பல விதங்களில் ஒன்று படுகிறார்கள். சுன்னியில் ஒரு பிரிவான சௌதிய வஹாபிஸம்தான் இன்றைய லட்சக்கணக்கான உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லலாம். கோடிக்கணக்கான எண்ணை பனம் உலகமெங்கும் வஹாபிஸத்தை வளர்க்க கொட்டப் படுகிறது. உலகில் 75 முதல் 80 சதவீத முஸ்லீம்கள் சுன்னிகள், 10 முதல் 20 சதவீதம் ஷியாக்கள். ஹியாக்கள் லெபனான், ஈரான், ஈராக், அஜர்பைஜான், பஹ்ரைன் மற்றும் பாக்கிஸ்தானில் (பெரும்பான்மை சுன்னிகள்) அதிகமாய் வாழ்கிறார்கள். பல சுன்னி பெரும்பான்மை நாடுகளில், மற்றும் ஈராக்கில், ஒவ்வொரு நாளும் ஷியாக்களை கொன்று குவிப்பதை வெறித்தனமாய் செய்கிறார்கள் சுன்னி வஹாபிஸ்டுகள். ஆக ஒரு மாமியார், மருமகனின் வாரிசு சண்டை உலகில் இன்று இத்தனை உயிர்களை வாங்கிக் கொண்டிருக்கிறது. |
Tuesday, 19 March 2013
மாமியார், மருமகன் சண்டைக்கு இத்தனை லட்சம் பேர் பலியா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment