Wednesday, 6 February 2013

முகமதியர்களிடமிருந்து கற்பை காக்க உயிரைவிட்ட 74,500 இந்து பெண்கள்

Swami Vidyananda's Photos


முகமதியர்களிடமிருந்து கற்பை காக்க உயிரைவிட்ட 74,500 இந்து பெண்கள்
……………இந்தியப்பெண்கள் பற்றி சுவாமி விவேகானந்தர்(ஞானதீபம் 8 பக்கம்173)
…………………………………..
வட இந்தியாவில் முகமதிய பேரரசு உருவாகி வளர்ந்து வந்தபோது.சித்துார்(ராஜஸ்தான்) ராணி ராணி பத்மினியின் அழகு நாடெங்கும் பிரபலம் அடைந்தது.அது சுல்தானின் காதுக்கும் எட்டியது.உடனே அவளை தனது அந்தப்புறத்துக்கு அனுப்புமாறு சுல்தான் கட்டளையிட்டான்.அதன் விளைவாக சித்துார் மன்னனுக்கும் சுல்தானுக்கும் இடையே போர் மூண்டது.முகமதியர்கள் சித்துாரை சூழ்ந்து கொண்டனர்.இனி எதிர்த்து போரிட முடியாது என்று கண்ட ராஜபுத்திர வீரர்கள் தங்கள் வாளால் தங்களை வெட்டிக்கொண்டு மாய்ந்தார்கள்,பெண்ளை தங்கள் கற்பை காக்கும் பொருட்டு தங்களையே தீ வளர்த்து அதில் விழுந்து உயிர்நீத்தார்கள்.
ஆண்கள் அனைவரும் மாண்ட பிறகு சுல்தான் நகரத்திற்குள் நுழைந்தான். அங்கே தெருவில் எரிந்து கொண்டிருந்தது மாபெரும் நெருப்பு. ராணியே தலைமை ஏற்றுச் செல்ல,ஏராளம் பெண்கள் அந்த நெருப்பை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர்.சுல்தானின் முன்னிலையில் இதுதான் ராஜபுத்திர பெண்கள்.எங்கள் கற்புபை புரிந்து கொள் என கூறி தீயி்ல் பாய்ந்தார்கள்.
முகமதியர்களிடமிருந்து தங்கள் கற்பை பாதுகாத்து கொள்வதற்காக அன்று 74,500(எழுபத்தி நாலாயிரத்து ஐநுாறு) டிபண்கள் அந்த தீயில் விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது.

……………இந்தியப்பெண்கள் பற்றி சுவாமி விவேகானந்தர்(ஞானதீபம் 8 பக்கம்173)
Like ·  ·  · Share · Edit · Promote · January 16

No comments:

Post a Comment