Photos of You
![]() |
Feb 01\02\2013
— with Kishore Kswamy, Balaje Venkatraman, Shan k Kumar, Swami Vidyananda, Bala Murugan Kand Tamil Arasan.இன்று தொழுகை முடிந்த நேரத்தில் பாக். மசூதிக்கு வெளியே தற்கொலை தாக்குதல்! இன்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த நேரத்தில் பாகிஸ்தான் மசூதி அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தின் ஹங்கு நகரின் பாத் பஜார் பகுதியில் உள்ள மசூதி அருகேயே சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு பொது மக்கள் மசூதியை விட்டு வெளியேறியபோது குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள், மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர், தொழுமை முடித்துக்கொண்டு வெளியே வந்தவர்களே. ஹங்கு மாவட்ட போலீஸ் அதிகாரி மொஹமட் சையத், “இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றே ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறது. மசூதியில் இருந்து வெளியே வரும் வாயில்கள் ஒன்றின் அருகில் வைத்தே, தனது உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளார் ஒருவர்” என்றார். “சுன்னி இன இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினரால், ஷியா இன இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு இது. தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த அனைவரும் ஷியா இனத்தவர். ஆனால், குண்டு சக்திவாய்ந்தது என்பதால், மசூதிக்கு அருகே கடை வைத்திருந்த சிலரையும் கொன்று விட்டது. இப்படி கடைகளில் கொல்லப்பட்டவர்களில் சுன்னி இன இஸ்லாமியர்களும் உள்ளனர்” என்றும் தெரிவித்தார், மொஹமட் சையத். தற்கொலை தாக்குதலை நடத்திய தீவிரவாதியின் தலை கிடைத்துள்ளது. அவர் வந்த மோட்டார் பைக்கும் சிதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் உரிமை கோரவில்லை. |
No comments:
Post a Comment