Tuesday, 19 March 2013

கீதை காட்டும் பாதை


கீதை காட்டும் பாதை

நம்மை சுற்றி என்ன நடந்தால் என்ன பகவான் பார்த்துக்கொள்வார் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள். பகவான் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் உள்ளார். நாம் எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பது உள்பட.

கீதையில் கண்ணன் தர்மத்தை செய் என்பதை விட அதர்மத்தை எதிர்த்து போராடு என்பதையே பெரிதும் வலியுறுத்துகிறான். 5150 வருடத்திற்கு முன் கண்ணன் உபதேசித்த கீதை இன்றைய பாரதத்திற்கு எத்தனை பொறுத்தமாக இருக்கிறது பாருங்கள். நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் மதமாற்றங்கள். மத ரீதியான தீவிரவாதங்கள். ஐரோப்பா முதல் அரேபியா வரை நம் நாட்டை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான டாலர்கள். பல்லாயிரக்கணக்கான வருட தர்மத்தை பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மூலம் அழிக்க பார்க்கிறார்கள். நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம்.

கீதையை ஏன் இறைவன் யுத்தத்திற்கு இடையே போதித்திருக்க வேண்டும் ? அமைதியான சூழ்நிலையில் போதித்திருக்கலாமே ? ஒரு ஆசிரமத்திலோ, ஒரு சாத்வீகமான சூழ்நிலையிலோ கீதையை உபதேசித்திருக்கலாமே ? ஒரு பெரும் போர்களத்தின் நடுவிலா அதை உபதேசிக்க வேண்டும் ?

மஹாபாரத யுத்தம் என்பது போர்களம். தர்மத்திற்கு, அதர்மத்திற்கும் நடக்கும் போர். நம் மனதிற்குள்ளும், நம் வாழ்க்கையிலும், நம் தேசத்திலும் அப்படிப்பட்ட போர்தான் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் இடையே முடிவில்லாத ஒரு போர் நடந்துக் கொண்டே இருக்கிறது. போர்களம் இடைவிடாத செயலாற்றலை குறிக்கிறது.

பல நேரங்களின் அர்ஜுனனின் நிலைதான் நமக்கும். எதற்கு போரிட வேண்டும் ? அதர்மிகள் நமக்கு வேண்டப்பட்டவர்களாக தெரிகிறார்கள். நமக்கு நெருங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் நம் எண்ணங்களாகவே கூட அவை இருக்கின்றன. இத்தனை நெருக்கமானவர்களை எதற்கு எதிர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தலை தூக்குகிறது.
நாம் ஏன் எதிர்க்க வேண்டும், வேறு பலர் அதற்காக பிறந்திருக்கிறார்களே என்ற எண்ணமும் வருகிறது.

அதர்மத்தை சேர்ந்தவர்களை எதிர்த்து போரிடாமல் இருக்கும் அர்ஜுனனை நோக்கி கண்ணன் சொல்கிறான் "நீ துக்கப்படத்தகாத மனிதர்களின் பொருட்டு வருந்துகிறாய், மேலும் பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய்" [சு 2/11] என்கிறான். கூடவே "இந்த தர்மத்தை கூடிய யுத்தத்தை நீ செய்யவில்லையானால், அப்போது சுய தர்மத்தையும் புகழையும் இழந்து பாவத்தை அடைவாய்" [2/33] என்கிறான்.

அதர்மத்திற்கு எதிரான போரை நாம் விருப்பு வெருப்பற்ற நிலையில் செய்ய வேண்டும் என்கிறான் கண்ணன். நான் செய்கிறேன் என்ற ஆண‌வத்தோடு செய்யாமல் நான் வெறும் கருவி, இறைவன் என்னை செய்ய வைக்கிறான் என்ற நிலையில் செய்யப்படும் போது நாம் நம் இலக்கை அடைகிறோம். அதிலும் செயல் புரியாமல் இருப்பதில் உனக்கு பற்று இருக்க கூடாது என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறான். செயலாற்றவே நாம் பிறந்தோம், அது ஒவ்வொரு நாளும் நாம் ஆற்ற வேண்டிய‌ போர்.

உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பயன்களின் ஒருகாலும் உரிமையில்லை. ஆகவே நீ க‌ர்மங்களின் பயன்களைக் கோருவதற்கு காரணமாக ஆகாதே. மேலும் உனக்குக் கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக் கூடாது [2/47]

நம் நாட்டின் சரித்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை பெரிய நாகரீகம் நமது ? எத்தனை பெரிய சரித்திரம் நமது ?
ஏன் அந்நியனுக்கு அடிமைப்பட்டோம் ? ஏன் இன்று இத்தனைகோடி மக்களாகிய நாம் உலகில் மூன்றாம் தர மக்களாய் இருக்கிறோம் ? அதர்மத்தை எதிர்த்து போராடாத அந்த குணம் தான் அத்தனைக்கும் காரணமல்லவா ? ஆயிரம் வருடம் முன்பு கொள்ளையன் கஜினி முகம்மது உடன் தர்ம யுத்தம் புரிந்ததில் தொடங்கி, இன்று வரை தர்மத்தை செய்ய நினைக்கும் நாம் அதர்மத்தை அழிக்க நினைக்காததால் தான் அழிந்து கொண்டிருக்கிறோம்.

அதர்மத்தை எதிர்ப்பதே மிகச் சிறந்த‌ தர்மம்

அதர்மத்தை எதிர்க்காமல் இருப்பதே மிகப்பெரும் அதர்மம். .

இது கீதை நமக்கு காட்டும் பாதை. இதுதான் கீதையின் உண்மையான சாரம்.
 — with Prakash IyarMadras MemesJaya KumarAarthi A AarthiBjp Sakkudisrinivasan YadavAllahu AkbarALLAHGopi NathBjp Coimbatore Thondamuthur MandalKarthik KeyanRagunathan Vasanthan,அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சிRss Vignesh YadavStephen Mani,Praveen Npk KumarVidhu HaasanKali DasanYuva Sakthi Senthil KumarGobi KannanManutd GuruAnandan VasudevanSahasra Sri RaviSwami Vidyananda,Vinodh AkkalrajYuvaraj BjpTamil ArasanKarthik PrabhuRaj ChennaiBjp MarthandamRamasamy TvmAbdul Wahabருத்ர குமார்Premkumar Iyer,Karthik AnantharamanHindu ReligionMeeran SaitVenkatesh Kannaveera andShaktivel Mudaliar.
Like ·  ·  · Share · February 17
  • Rahmathulla Sulthanதர்மம்...அதர்மம்..நீங்கள்.உண்மையாக..தர்மத்தின்..பக்கம் என்றால்...இன்று..சத்தியத்தின்..பக்கம்தான்.இருக்கவேண்டும்..நீங்கள்..தர்மத்தை..போதிக்கும். காலம்.கடந்துவிட்டது...சத்தியமும் தர்மமும்..ஒன்றுதான்...சத்தியமே.வெல்லும்

1 comment:

  1. We used to tolerate injustice against us. We always forgive and forget our enimies.

    ReplyDelete