Tuesday, 19 March 2013

சிந்து மாநிலத்தில் இஸ்லாமிய கலிபாவின் தோல்வி -----


----சிந்து மாநிலத்தில் இஸ்லாமிய கலிபாவின் தோல்வி -----

இஸ்லாமிய கலிபாக்கள்,உலகின் பிற நாடுகளை மிகவும் சுலபமாக தோற்கடித்தனர்...கிபி 636-637க்குள்,பாலஸ்தீன பைஜந்தீன்(byzantine ) மற்றும் சிரியா,ஆறு மாத காலத்தில் முஸ்லிம்கள் கைக்குல் விழுந்தது.பிறகு பாரசீகம் ,கிபி 637இல் தோற்கடிக்கப்பட்டு,இஸ்லாமியர்களிடம் வீழ்ந்தது.. அரபு இஸ்லாமிய கலிப்பா வட ஆப்பிரிக்கா வரை வென்று,கிபி 709இல் ஸ்பெயினை கைப்பற்றியது..மிகவும் குறுகிய காலத்தில்,பல நாடுகளை கைப்பற்றி,அவற்றின் பூர்வ கலாச்சாரத்தை அழித்து,இஸ்லாத்தை பரப்பியது கலிப்பா..ஆனால்,பாரதத்தில்,கலிப்பா தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்தது...

கலிப்பா உமர்,இரண்டு கடல் வழி படையை,குஜராத்துக்கும் மஹாராஷ்ட்ராவுக்கும் அனுப்பினான்..ஆனால்,அந்த இஸ்லாமிய படை தோற்கடிக்கப்பட்டது...சிந்துக்கு எதிரான இஸ்லாமிய படையெடுப்பும் இதே நிலையை சந்தித்தது..சிந்துக்கு எதிரான போரில்,இஸ்லாமிய படையின் தளபதி முகைரா கொல்லப்பட்டான்..இரண்டாம் முறையாக சிந்துக்கு எதிராக கலிப்பா உமர்,ஒரு படையை அனுப்ப முடிவு செய்தான்...ஹிந்தைப் (hind/bharata)பற்றி இனிமேல் சிந்திக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்.. அந்த கலிப்பாவும் தன் எண்ணத்தை கைவிட்டான்..அடுத்த கலிப்பாவான உஸ்மான்(கிபி 646-656) ,முன்பு கூறிய ஆலோசனைப் படியே,சிந்துக்கு எதிராக எந்த படையையும் அனுப்பவில்லை... நாலாம் கலிப்பாவான அலி(கிபி 656-661), தரை வழி படையை அனுப்பினான்..ஆனால்,அந்த படையின் தளபதியும் அவனுடன் இருந்த பலரும்,போரில் கொல்லப்பட்டு,புறமுதுகு காட்டி ஓடினர்..இப்படி,நான்கு கலிப்பாக்களும்,சிந்தை கைப்பற்றாமலும் அதன் மீது வெற்றிகொள்ளாமலும் ,இறந்துவிட்டனர்... அடுத்த கலிப்பாவான முவையா,ஆறு படையெடுப்புக்களை தரைவழி,சிந்துக்கு(அல்லது பாரதத்துக்கு) அனுப்பினான்...முதல் ஐந்து போரில்,முஸ்லிம் படையினரின் பெரும் தோல்வியை தழுவினர்..பெரிய உயிரிழப்பை இந்தப் போர்களில்,இஸ்லாமிய படை சந்தித்தது...கடைசி(ஆறாம்) படையெடுப்பு மட்டும் வெற்றி பெற்றும்,சிந்து மாநிலத்தின் ஒரு நகரமான மக்ரான்,கிபி 680இல் ஆக்கிரமிக்கப்பட்டது.. அடுத்த 28 ஆண்டுகளுக்கு,இஸ்லாமிய கலிப்பா,அச்சத்தோடு,எந்த படையையும் பாரதத்துக்கு எதிராக அனுப்பவில்லை..

பிறகு,இஸ்லாமிய கலிப்பா,சிந்து மாநிலத்தில் உள்ள டெபாலை கைப்பற்ற இரண்டு படையை அனுப்பியது...அந்தப் படைகளின்,இரண்டு தளபதிகளான உபைதுல்லாவும் புதைலும் (Budail) கொல்லப்பட்டு,பெரும்பன்மையான முஸ்லிம்கள் போரில் கொல்லப்பட்டு,இஸ்லாமிய படை புறமுதுகு காட்டி ஓடியது... ஈராக்கின் கவர்னர்,ஹஜ்ஜஜ்,கலிப்பாவிடம்,மற்றுமொரு தடவை,இஸ்லாமியப் படையை அனுப்புவோம் என்று அனுமதி கேட்க,அதற்கு கலிப்பா என்ன சொன்னான் தெரியுமா ?? "இந்த விவகாரம் (பாரதத்தின் மீது படையெடுப்பு) எனக்கு மிகவும் வருத்தமலிப்பதாக உள்ளது.ஒவ்வொரு தடவையும் நம் இஸ்லாமிய படை தோற்று பல்லாயிரக்கணக்கான முசல்மன்கள் கொல்லப்படுகின்றனர்..ஆதலால் இந்த எண்ணைத்தை நாம் கைவிட வேண்டும்..இந்த வழியை இனி நாம் பின்பற்றக் கூடாது " என்று கூறினான்..அன்றைய காலத்தின் மிகப்பெரிய ராஜ்ஜியமாக இருந்த இஸ்லாமிய கலிப்பாவே,ஒரு சின்ன சிந்து மாநிலத்தை கைப்பற்ற முடியாமல் அச்சம் கொள்ள வைத்தது சைவ அரசர்களின் வீரம்... இன்னும்,பல தடவை இஸ்லாமிய படைகள்,பாரதத்தில் பந்தாடப்பட்டது...மேலும் ,ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை பல தடவை இஸ்லாமிய படைகள் படையெடுத்து வந்தும்,அதில் முக்கால்வாசி தடவை இஸ்லாமிய படை பாரதத்தில் தோற்றுப் போனது...இவர்கள் 540 வருஷன்கள் போராடி,கிபி13ஆம் நூற்றாண்டில் தான் பாரதத்தில் ஒரு இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தது..அது தான் டில்லி சுல்தானியம்..ஆனாலும்,அந்த டில்லி அரசும்,வட நாட்டில்,சில மாநிலங்களைத் தான் ஆக்கிரமித்தது..தென்னாட்டில்,அது பரவவில்லை...ஆதலால்,இஸ்லாமிய படையெடுப்பு,பாரதத்தில் படுதோல்வியடைந்தது....


மேலும் படிக்க (ஆங்கிலத்தில்) ,இங்கு செல்ல : http://voiceofdharma.org/books/hhrmi/
 — with Karthik AnantharamanMothi Lal SGeetha Hariharasarma,Hindu SevakanSivakumar BalasubramanianDindigul SivanadiyargalKapalee Suyambu DuraiYuva Sakthi Senthil KumarSwaminathan MurugaiyanAtthippattu Srinivasan MuralitharanKambathasan DasanSwami VidyanandaKali DasanSivan AdiyenVenkatesan DeekshitharSomasundaram RamanathanSelvaa VaideeswaranManutd GuruKrishnakumar PrathapanLanka Watch and Vidhu Haasan.
Like ·  ·  · Share · February 11

No comments:

Post a Comment