Swami Vidyananda's Photos

Swami Vidyananda
1424. காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3264 இப்னு உமர் (ரலி) . 1426. காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5726 ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி). .......................... .......................... காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது.!!!!!!!.இது உண்மையா? .......................... 533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :9 ஸஹீஹுல் புகாரி .......................... 535. அபூ தர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் 'கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு" என்று கூறிவிட்டு, 'கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்!" என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துங்கள்!" என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். Volume :1 Book :9 ஸஹீஹுல் புகாரி .......................... 537. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :9 ஸஹீஹுல் புகாரி .......................... கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான் .......................... கருத்து....இவர்களால் ஒத்துக்கொள்ளவும் முடியாது,ஒத்துக்கொள்ளாமலும ........... இவைகளை ஆராயக்கூடாதாம்.அப்படியே நம்பவேண்டுமாம் .......................... 318. 'அல்லாஹ் பெ(ண்ணுறுப்பு வழியாகபெண்ணின்)கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :6 ஸஹீஹுல் புகாரி .......................... கேள்வி கர்ப்பம் அடையும் ஒவ்வொரு பெண்ணின் கர்பப் பையினுள்ளும் வானவர்கள் இருக்கிறார்களா?.எத்தனை வானவர்கள்? .......................... 461. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். 'இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :8 ஸஹீஹுல் புகாரி .......................... கேள்வி....ஜின்னை மக்களுக்கு காட்டாமல் மறைத்தது ஏன்?குரானில் முகம்மது நபி குறிப்பிடும் அந்த வசனம் என்ன அர்த்தம்? .......................... 533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :9 ஸஹீஹுல் புகாரி .......................... கேள்வி......வெப்ப காற்று நரகத்திலிருந்து வருகிறதா? சூரியனிலிருந்து வருகிறதா? .......................... 537. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :9 ஸஹீஹுல் புகாரி .......................... கேள்வி.......நரகம் உயிருள்ள பொருளா? நரகம் ஆணா?பெண்ணா??ஏனென்றால் வாய் இருந்தால் தானே பேசமுடியும்? .......................... 555. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவாக்ளும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்" என்று அவர்கள் விடையளிப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :9 ஸஹீஹுல் புகாரி .......................... கேள்வி....தினசரி உங்களிடம் வரும் ஒரு வானவரைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லையா? .......................... 748. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Volume :1 Book :10 ஸஹீஹுல் புகாரி .......................... கேள்வி....இங்கிருந்து சொர்க்கம் அவ்வளவு பக்கமா?. .......................... 781. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: "உங்களில் யாரேனும் ஆமீன் கூறினால் வானுலகத்தில் வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். இவ்வாறு வானவர்கள் கூறும் ஆமினுடன் எவருடைய ஆமீன் ஒத்து வருகிறதோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :10 ஸஹீஹுல் புகாரி .......................... கேள்வி....ஆமீன் சொன்னால் போதுமா? .......................... |
No comments:
Post a Comment